இந்த வலைப்பூ , இத்தனை ஜோடி கண்களால் வாசிப்பு

பேராசிரியர் பி.ஜி.கதிரவனின் வலைப்பூ

2/24/2009

கை விரல்களில் ஒன்பதாம் வாய்பாடு

இரு கை விரல்களையும் நீட்டிக் கொள்ளுங்கள் .
உள்ளங்கைகள் வானம் பார்த்து இருக்கட்டும் .
ஒன்றையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள
நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் பெரு விரலை ( அதாவது முதல் விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் ஒன்பது . அது தான் விடை .
இரண்டையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள
நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் ஆள்காட்டி விரலை மட்டும் ( அதாவது இரண்டாவது விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் .......மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்கள் ஒன்று , அந்த பக்கம் இருக்கும் விரல்கள் எட்டு . இரண்டையும் அருகருகே எழுதினால் பதினெட்டு . அது தான் விடை .

மூன்றையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் நடுவிரலை மட்டும் ( அதாவது மூன்றாவது விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் .......மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்கள் இரண்டு , அந்த பக்கம் இருக்கும் விரல்கள் ஏழு . இரண்டையும் அருகருகே எழுதினால் இருபத்து ஏழு . அது தான் விடை .

நான்கையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு நாலாவது விரலை மடக்கி ...... மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்களையும் , அந்த பக்கம் இருக்கும் விரல்களையும் அருகருகே எழுதினால் முப்பத்து ஆறு . அது தான் விடை .

இப்படியே .....ஐந்தையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு ஐந்தாவது விரலை யும்
.... ஆறையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு ஆறாவது விரலை யும் மடக்கி ... மீதி இருக்கும் விரல்களைக் கொண்டு விடை அறியலாம் .

ஆனால் கை விரல்களைக் கொண்டு பத்து தடவை மட்டுமே பெருக்க முடியும் .
அதற்கு மேல் பெருக்க ........ ?

இருக்கவே இருக்கிறது கால் விரல்கள்.

..... பிரியங்களுடன் ...பி. ஜி. கதிரவன்

பின்பற்றுபவர்கள்