மூன்றாண்டு காலம் எடுக்கப்பட்டு ...
மூச்சு திணற வைக்கிற பிரச்சினைகளை க்கடந்து வருகிற படம் என்பதால் இயல்பாகவே படம் பார்க்கிற ஆர்வம் அதிகமிருந்தது .
தொலைக்காட்சிகளில் முன்னோட்டங்கள் காட்டப்பட்ட போதே தெரிந்து விட்டது
படம் தீவிர போக்கு கொண்ட படமாக இருக்கும் என்று .
நினைத்த படியே , ருத்ரனையும் , தாண்டவனையும் பற்றிய
ருத்ர தாண்டவ படம் இது .
முதல் காட்சியிலேயே நாமும் காசியில் இருப்பது போல ஒரு ஐக்கிய உணர்வு
உருவாக செய்து விடுவது இணைந்திருக்கிற கலைஞர்களின் வலிமை .
பழைய பாடல்களின் பால் பாலாவிற்கு இருக்கிற ஈர்ப்பு "பிதா மகனை " த்தொடர்ந்து இதிலும் வெளிப்பட்டிருக்கிறது .
பொதுவாக பாலாவின் படங்களில் கதாநாயகனுக்கும் , கதா நாயகிக்கும் "டூயட் "
இருந்ததே கிடையாது .
என்றாலும் இருவரும் சந்திப்பார்கள் , யாராவது ஒருவர் காதல் உணர்வு கை வரப் பெறுவார்கள் .
இதில் அதற்கும் வாய்ப்பு இல்லை .
பதினான்கு வருடங்களுக்கு முன்னால் காசியில் கை விட்டு வந்த மகனை , அவன் வளர்ந்து ,
"இறந்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு " மோட்சமும் மறுபிறவியில் இருந்து விடுதலையும் தருகிற "அகோரி " ஆனபிறகு , சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் தந்தை .
அவன் இங்கு வந்து ,உறவுகளில் இருந்து ஒதுங்கி ,கஞ்சா புகைத்தபடி , வாழ தகுதி இல்லாத இருவருக்கும் , வாழ விரும்பாத கதா நாயகிக்கும் " உயிர் விடுதலை " தந்து விட்டு மறுபடியும் காசிக்கே திரும்பி விடுவது தான் கதை .
" நான் கடவுள் " என்கிற தலைப்பை பார்த்தவுடன்
"கடவுள் என்பவர் வெளியில் வேறெங்கேயோ இல்லை . தனக்குள் தான் இருக்கிறார் " என்பதை ஒவ்வொரு மனிதனும்உணரும் விதத்தில் எடுக்கப் பட்ட படமாக இருக்கும் என நினைத்து படம் பார்க்கப் போனால் ஏமாற்றேமே உங்களை எதிர் கொண்டழைத்து வரவேற்று உபசரிக்கும் .
இது.........." தானே கடவுள் "என்று நினைக்கிற ஒரு தனி மனிதனின் கதை .
படத்தில் கடவுளாக தன்னை உணருகிற , பாவிக்கிற , ஆர்யாவுக்கான வசனங்களை ஒரு வெள்ளைத்தாளில் அரைப் பக்கத்தில் எழுதி விடலாம் .
பெரும்பாலும் காட்சிகளாலேயே ரசிகர்கள் வழி நடத்த படுகிறார்கள் .
மூச்சு திணற வைக்கிற பிரச்சினைகளை க்கடந்து வருகிற படம் என்பதால் இயல்பாகவே படம் பார்க்கிற ஆர்வம் அதிகமிருந்தது .
தொலைக்காட்சிகளில் முன்னோட்டங்கள் காட்டப்பட்ட போதே தெரிந்து விட்டது
படம் தீவிர போக்கு கொண்ட படமாக இருக்கும் என்று .
நினைத்த படியே , ருத்ரனையும் , தாண்டவனையும் பற்றிய
ருத்ர தாண்டவ படம் இது .
முதல் காட்சியிலேயே நாமும் காசியில் இருப்பது போல ஒரு ஐக்கிய உணர்வு
உருவாக செய்து விடுவது இணைந்திருக்கிற கலைஞர்களின் வலிமை .
பழைய பாடல்களின் பால் பாலாவிற்கு இருக்கிற ஈர்ப்பு "பிதா மகனை " த்தொடர்ந்து இதிலும் வெளிப்பட்டிருக்கிறது .
பொதுவாக பாலாவின் படங்களில் கதாநாயகனுக்கும் , கதா நாயகிக்கும் "டூயட் "
இருந்ததே கிடையாது .
என்றாலும் இருவரும் சந்திப்பார்கள் , யாராவது ஒருவர் காதல் உணர்வு கை வரப் பெறுவார்கள் .
இதில் அதற்கும் வாய்ப்பு இல்லை .
பதினான்கு வருடங்களுக்கு முன்னால் காசியில் கை விட்டு வந்த மகனை , அவன் வளர்ந்து ,
"இறந்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு " மோட்சமும் மறுபிறவியில் இருந்து விடுதலையும் தருகிற "அகோரி " ஆனபிறகு , சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் தந்தை .
அவன் இங்கு வந்து ,உறவுகளில் இருந்து ஒதுங்கி ,கஞ்சா புகைத்தபடி , வாழ தகுதி இல்லாத இருவருக்கும் , வாழ விரும்பாத கதா நாயகிக்கும் " உயிர் விடுதலை " தந்து விட்டு மறுபடியும் காசிக்கே திரும்பி விடுவது தான் கதை .
" நான் கடவுள் " என்கிற தலைப்பை பார்த்தவுடன்
"கடவுள் என்பவர் வெளியில் வேறெங்கேயோ இல்லை . தனக்குள் தான் இருக்கிறார் " என்பதை ஒவ்வொரு மனிதனும்உணரும் விதத்தில் எடுக்கப் பட்ட படமாக இருக்கும் என நினைத்து படம் பார்க்கப் போனால் ஏமாற்றேமே உங்களை எதிர் கொண்டழைத்து வரவேற்று உபசரிக்கும் .
இது.........." தானே கடவுள் "என்று நினைக்கிற ஒரு தனி மனிதனின் கதை .
படத்தில் கடவுளாக தன்னை உணருகிற , பாவிக்கிற , ஆர்யாவுக்கான வசனங்களை ஒரு வெள்ளைத்தாளில் அரைப் பக்கத்தில் எழுதி விடலாம் .
பெரும்பாலும் காட்சிகளாலேயே ரசிகர்கள் வழி நடத்த படுகிறார்கள் .
ஆர்யா குளிக்கிற காட்சிகள் உண்டு ; புகைக்கிற காட்சிகள் உண்டு ; உணவருந்துகிற காட்சிகள் மட்டும் இல்லையே ............ஏன்..? என்று யோசித்தேன் . பிறகு தான் தெரிந்தது . "அகோரிகள் " மனித மாமிசம் சாப்பிடுகிறவர் என்று . படத்தில் ஆர்யா ஒரு அகோரி . எனவே , அவர் சாப்பிடும் காட்சிகளை சென்சாரின் நாக்குகள் சாப்பிட்டு இருக்கலாம் .
இன்னொரு முக்கியமான விஷயம் .
நாம் இப்போது சன் டிவி யுகத்தில் வாழ்கிறோம் .
இந்த யுகத்தில் ஒரு படம் வெற்றி பெற அதன் பாடல்களை தினந்தோறும் இருபது முறை தொலைக் காட்சியில் காட்ட வேண்டும் .
நகைச்சுவை காட்சிகளை மறுபடி மறுபடி போட்டு காட்டி கொண்டே இருக்க வேண்டும் .
நான் கடவுள் படத்திற்கு இந்த இரண்டையுமே செய்வது இயலாது .
இருக்கிற " மாதா உன் கோவிலில் ..." பாடலையும் ஆப்பரேட்டர்கள்அவர்களாகவே வெட்டி தள்ளி விடுகிறார்கள் .
எனவே இந்த படம் பிரமாண்ட வெற்றியை (?) அடைவது சந்தேகமே .
இந்த படத்தில் ஒரு நெருடலான விஷயம் என்னவென்றால் , ஆர்யா ...... வாழ தகுதி இல்லாத இருவரை மட்டுமே , அதுவும் அவர்களாக தேடி வந்து வம்பிழுத்த பிறகே அழிக்கிறார் . மீதி .... ? கடவுளுக்கே வெளிச்சம் .
பாலாவின் முயற்சி புதிதாக இருந்தாலும் ஒரு முழு திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படாதது இந்த படத்தின் குறைபாடே என்பது என் தனிப்பட்ட கருத்து .
நாம் இப்போது சன் டிவி யுகத்தில் வாழ்கிறோம் .
இந்த யுகத்தில் ஒரு படம் வெற்றி பெற அதன் பாடல்களை தினந்தோறும் இருபது முறை தொலைக் காட்சியில் காட்ட வேண்டும் .
நகைச்சுவை காட்சிகளை மறுபடி மறுபடி போட்டு காட்டி கொண்டே இருக்க வேண்டும் .
நான் கடவுள் படத்திற்கு இந்த இரண்டையுமே செய்வது இயலாது .
இருக்கிற " மாதா உன் கோவிலில் ..." பாடலையும் ஆப்பரேட்டர்கள்அவர்களாகவே வெட்டி தள்ளி விடுகிறார்கள் .
எனவே இந்த படம் பிரமாண்ட வெற்றியை (?) அடைவது சந்தேகமே .
இந்த படத்தில் ஒரு நெருடலான விஷயம் என்னவென்றால் , ஆர்யா ...... வாழ தகுதி இல்லாத இருவரை மட்டுமே , அதுவும் அவர்களாக தேடி வந்து வம்பிழுத்த பிறகே அழிக்கிறார் . மீதி .... ? கடவுளுக்கே வெளிச்சம் .
பாலாவின் முயற்சி புதிதாக இருந்தாலும் ஒரு முழு திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படாதது இந்த படத்தின் குறைபாடே என்பது என் தனிப்பட்ட கருத்து .
