இனிய நண்பர்களே ...
கதிரவனின் கை கூப்பல்கள் .
மிக சமீபத்தில் தான் நான் இணைய தளங்களில் மேயப் பழகினேன் .
குறிப்பாக எழுத்தாளர் ராம கிருஷ்ணனின் இணையதளத்திற்கு சென்று அவரின் எழுத்துக்களை மிக ஆர்வமாக வாசித்தேன் .
பற்றுக்கொடி கிடைத்த பின் படர்கொடி சும்மா இருப்பதில்லையே ..
அது போல
வேறு இணைய தளங்கள் உண்டா என தேடி அலைந்து
அம்பலம் , கிறுக்கல் , வீணாப்போனவன் , ரசனைக்காரன் , என
இணைய தளங்களில் என் மேய்ச்சல் பரவலானது.
கல்லூரி ஆசிரியனாக பணியாற்றி வந்தாலும் ,
வணிகவியல் துறையைச் சார்ந்தவனாக இருந்தாலும்
படைப்பு இலக்கியங்களின் பால் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன் .
கல்லூரியில் இளங்கலை வணிக வியல் படிக்கிற காலத்திலேயே
" இளைய ரோஜா " என்ற மாத இதழை அச்சில் வெளியிட்டு வந்தேன் .
பிறகு வானொலியில் கவிதைகள் வாசிக்கவும் , செயற்கைக்கோள் தொலைக் காட்சிகளின் பேச்சரங்கங்களில் பங்கு பெறவும் துவங்கினேன் .
பிறகு கவிதை புத்தகங்கள் வெளியிட , தொகுப்பு நூல்கள் வெளியிட துவங்கினேன் .
சொந்த பதிப்பகம் வாயிலாக பாட புத்தங்களும் வெளியிட ஆரம்பித்தேன் .
திரைப்படம் என்பது என்னை பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய வகுப்பறை .
அந்த வகுப்பறையில் ஆசிரியப்பணி கிடைக்குமா என அலைந்து கொண்டிருக்கிறேன் .
அதற்காக " என்ன ராசா செய்தாய் ?" என்று கேட்டால்
" கீதையை பின்பற்றுகிறேன் " என்பதே என் பதிலாக இருக்கும் .
புரியவில்லையா..?
கீதை சொல்கிறது .
" நீ எதை நினைக்கிறாயோ ... அதுவாகவே மாறி விடுகிறாய் ."
நான் திரைத்துறையில் நுழைய வேண்டு மென்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் .
நுழைந்த பின் பயன் படுத்துவதற்கு நிறைய சரக்குகள் சேமித்து வைத்து இருக்கிறேன் .
இதுவே நான் .
இந்த சூழ்நிலையில் நமக்கென ஒரு இணைய தளம் துவக்கினால் என்ன என்று தோன்றியது .
அப்போது தான் கிறுக்கல் வாயிலாக இலவசமாக வலைப்பூ துவங்க வாய்ப்பு இருப்பது தெரிந்து
இங்கு வந்து சேர்ந்தேன்.
இந்த பக்கங்களில் நான் எழுதியிருப்பவை எல்லாம் வலைப்பூ எப்படி செயல் படுகிறது
என தெரிந்து கொள்ள நான் எழுதிய சுய விவரங்கள் .
இனி என் படைப்புக்கள் வரிசையாக வலம் வரத்துவங்கும் .
நன்றி . கதிரவன் .பி .ஜி
இந்த வலைப்பூ , இத்தனை ஜோடி கண்களால் வாசிப்பு
பேராசிரியர் பி.ஜி.கதிரவனின் வலைப்பூ
