மாலை நேரம் .
ஓய்வாகவும் , தளர்வாகவும் அமர்ந்திருந்தேன் .
துணைக்கு தேநீர் இருந்தது .
வரப்போகும் மகனுக்காக மாலை நேர டிபன் தயாரிப்பில் இருந்தாள் மனைவி .
"தொம் " என என் முன்னால் புத்தகப்பை வந்து விழுந்தது .
நிமிர்ந்து பார்த்தேன் .
ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகன் ஹரி .
" என்னடா ஹரி ...? "
" அப்பா ... நாளையில இருந்து நீ வேலைக்கு போக வேணாம் . வேலையை விட்டுரு ... "
கேள்விக்குறிகள் தொங்கும் கண்களுடன் கிச்சனிலிருந்து எட்டிப் பார்த்தாள் மனைவி .
" ஏண்டாஅப்படி சொல்ற ..? என்ன நடந்துச்சு ..? "
" உன்னால தினம் தினம் எனக்கு கெட்ட பேரு ...."
" என்ன கெட்ட பேரு .. "
" எங்க மிஸ் எதுக்கெடுத்தாலும் ' ஒரு புரபசரோட பையனா இருந்துக்கிட்டு இவ்வளவு மக்கா இருக்கியே ... ' ' ஒரு புரபசரோட மகனா இருந்துக்கிட்டு இவ்வளவு சேட்டை பண்ணுறியே ' ன்னு திட்டிக்கிட்டே இருக்காங்க . நீ புரபசரா இருக்கிறதுனால தான் இவ்வளவு பிரச்சனை . அதனால நீ இந்த புரபசர் வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போ .. என்னால திட்டு வாங்க முடியல ... "
கிச்சனிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது .
இந்த வலைப்பூ , இத்தனை ஜோடி கண்களால் வாசிப்பு
பேராசிரியர் பி.ஜி.கதிரவனின் வலைப்பூ
